
வரைந்து வைத்த ஓவியமே !
காதலர்கள் நெஞ்சினிலே
என்றும் வாழும் காவியமே !!
எத்தனையோ கவிஞர்கள்
பாடிப்போன பின்னும் !
ஒய்யாரமாய் உலவுகிறாய்
உயரத்தில் இன்னும் !!
உனைச் சுற்றிச் சுற்றி பார்த்துவரும்
பலருடைய எண்ணம் !
ஓர்நாள் சுற்றுலாவாய் வந்து பார்ப்பர்
இதுவே திண்ணம் !!
அறிவியலார் பலர் வந்து
செய்துவிட்டார் ஆராய்ச்சி!
இருந்தாலும் எங்கிருந்தோ
புரிகின்றாய் ஓர் ஆட்சி!!
உனை பெண்ணோடு ஒப்பிடவே
என்னோடும் பல சாட்சி!
உன்னைக் கண்டுவந்த எல்லோரும்
காணுகின்ற ஓர் மகிழ்ச்சி!!
முதன்முதலில் தொட்டதினால்
அவன்பெயரும் ஆர்ம்ஸ்ட்ரோங்கா?
அல்லது
அவன் "ஆர்ம்" "ஸ்ட்ராங்காய்" இருப்பதனால்
முதன்முதலில் தொட்டானா ? !
உனக்குள்ளும் இருக்கிறதோ
ஓர் பெரிய சோகக் கதை!
உனைக் கண்டஉள்ளம் காண்கிறதே
என்றும் அந்த பெரிய கறை! !
பெளர்ணமியாய் இருந்துகொண்டு
பல காதல் வார்வைத்தாய்
இருந்தும்
அமாவாசையாகி ஏனோ
பல மனதை நோகவைத்தாய் ! !
நீ முழுநிலவாய் இருப்பதையே
விரும்புது இப் பார் !
உன் மறுபுறத்தை இப்பூமியில்
கேட்பதுவும் யார் !!
வளி மண்டலம் சென்று
வந்த மானிடர்கள் எல்லாம் !
வழி அமைத்து அiழைக்கின்றார்
நாம் ஓர்நாள் செல்வோம் !!
அமிழ்தாக இருக்கிறதே
கேட்கின்ற பல சொல்லும் !
தமிர்த்தேரும் ஒருநாளில்
மெதுவாக அங்கு செல்லும் !!!..
- சிம்மபாரதி
15 comments:
Congrats...Super
கவிதை அருமை!
விரைவில் விஜய் படத்துக்கு பாட்டு எழுதும் அளவுக்கு வாய்ப்புகள் வந்து குவியட்டும்!
பதிவுலகிற்கு உங்களை அன்போடு வருக வருக என்று வரவேற்கின்றோம்.
’கருப்பு கண்ணாடி அருமை’ ;-) உங்க புகைப்படத்தில் உள்ளதை சொன்னேன். :-)
அருமை அருமை
//கருப்புக் கம்பளத்தில் வரைந்து வைத்த ஓவியமே ! //
தலைப்புக்கும் அருகில் இருக்கும் கண்ணாடி போட்டு போஸ் கொடுக்கும் ஹீரோவுக்கும் ஏதும் சம்மந்தம் இருக்கா?
பதிவு நீங்க போடவில்லை என்றாலும் உங்களை சின்சியராக பாலோ செய்யும் கலையரசனுக்கு ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்யுங்க சிம்மபாரதி:)
சட்டைல சேறு பட்டிருக்குண்ணே....
அடிகிடி ஒன்னும் படலயே?? பார்த்து இருந்துக்கங்க...
பதிவுவைப்பாத்த சந்தோசத்துல படிக்க மறந்துட்டேன்....
கவிதை கவிதை... நல்லாருக்கு தலைவா
//அவன் "ஆர்ம்" "ஸ்ட்ராங்காய்" இருப்பதனால்
முதன்முதலில் தொட்டானா ? ! //
கைய, கால உடச்சிட்டுதான் மறுவேலை பாப்பீங்க போல.. ம்?
;-)
கலக்கல் கவிதை!!
settings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)
//குசும்பன் said...
பதிவு நீங்க போடவில்லை என்றாலும் உங்களை சின்சியராக பாலோ செய்யும் கலையரசனுக்கு ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்யுங்க சிம்மபாரதி:)//
வாங்கண்ணே.. வாத்தியாரண்ணே.. சின்சியராக எல்லோரையும் ஃபாலோ செஞ்சிட்டு, ஒருத்தனுக்கும் கமெண்ட் போடாத உங்களுக்கு.. பாராட்டு மட்டும் இல்ல.. பாரையை உட்டும் ஆட்டுறோம்!!
கவிதையினில்
குளுமை தரும்
நிலவு
மனங்குளிரச் செய்யட்டும்
வாழ்க்கை முழுதும்..
தலைப்பு ஜோர்..சொல்லப் பட்ட கருத்துக்களும் ஜோர்!!
Post a Comment