Tuesday, June 16, 2009

வானலை வளர்தமிழ் அமைப்பின் தமிழ்த்தேர் இலக்கிய மாத இதழின் நான்காவது ஆண்டு விழா மற்றும் “சுப்ரமணியபுரம்” திரைப்பட குழுவினருக்கு பாராட்டு விழா

துபாயில் ஏ.ஆர் ரஹ்மான், மற்றும் “சுப்ரமணியபுரம்” திரைப்படக் குழுவினருக்குப் பாராட்டு, தமிழ்த்தேர் ஆண்டுவிழா காட்சிகள்.

வானலை வளர்தமிழ் அமைப்பின் தமிழ்த்தேர் இலக்கிய மாத இதழின் நான்காவது ஆண்டு விழா மற்றும் “சுப்ரமணியபுரம்” திரைப்பட குழுவினருக்கு பாராட்டு விழா, துபாய் சஃபா பார்க் அருகில் உள்ள எமிரேட்ஸ் இங்கிலீஸ் ஸ்பீக்கிங் பள்ளியின் உள்ளரங்கில் நடைபெற்றது.


விழாவின் சிறப்பு விருந்தினர்களாக முனைவர்.பர்வின் சுல்த்தானா, கவிஞர்.யுகபாரதி மற்றும் சுப்ரமணியபுர பட இயக்குனர் சசி, நடிகர் ஜெய், இசையமைப்பாளர் ஜேம்ஸ்வசந்தன், “கண்கள் இரண்டால்” பாடல் புகழ் பாடகர் பெல்லிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பார்வையாளர்களின் ஒரு பகுதி...விழாவிற்கு சேர்த்தது மேலும் சுருதி...

வந்தே மாதரம் பாடலுக்கு குழந்தைகள் ஆடிய காட்சி பாடல் முடிந்ததும் விழாவின் சிறப்பு பகுதியாக ஆஸ்கார் புகழ் ஏ.ஆர்.ரஹ்மானை பாராட்டி கவுரவிக்கும் விதமாக அனைவரும் எழுந்து நின்று கரகொலி ஒலித்த காட்சி விழாவிற்கு சேர்த்தது மேலும் மாட்சி.

சங்கே முழங்கு பாடலுக்கான ஆடல்...
ஆண்டு விழா மலருடன் அனைவரும்...
மேடையில் பிரபலங்கள்
கவிஞர் யுகபாரதி மற்றும் முனைவர் பர்வின் சுல்த்தானா

சுப்ரமணியபுர பட இயக்குனர் சசி, மற்றும் நடிகர் ஜெய்

இசையமைப்பாளர் ஜேம்ஸ்வசந்தன் மற்றும் இயக்குனர் சசி
ஜேம்ஸ்வசந்த் நடத்திய "தமிழ்ப்பேசு தங்கக்காசு" பாணியில் நடத்திய
"தமிழோடு விளையாடு"
"த்வனி" அமைப்பு சார்பாக "தமிழ்த்தேரின்" படைப்பாளர்களை பதக்கம் அணிவித்து கௌரவித்த மாட்சிகளை படம் பிடித்த காட்சிகள்...

விழா அரங்கிற்கு வெளியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "ப்ரைம் மெடிகல் சென்டரின்" இலவச மருத்துவ முகாம்.

குடந்தை அசரப், திண்டுக்கல் சரவணன் மற்றும் திருச்சி சரவணக்குமாரின் நகைச்சுவை விருந்து மற்றும் ஜேம்ஸ்வசந்தின் தமிழோடு விளையாடு நிகழ்ச்சியுடன் விழா இனிதே நிறைவுற்றது.

விழா இரவு பதினொரு மணிவரை சென்றாலும் மக்கள் ஒரு இலக்கிய கலை விழாவைக் கூட்டம் கலையாமல் ரசித்துப் பார்த்த விதம், விழாவிற்கு கிடைத்த இரட்டைச்சதம்.